2009/10/29

தேய்பிறைப் பொழுதுகள்

1. உன் பாதச்சுவட்டில்
இதயம் நட்டுவைத்தேன்
மிதித்து மீண்டும் சுவடாக்கினாய்
எஞ்சிய உயிரையும்
நட்டுவைக்கிறேன்.

2. நீ
நட்டுவைத்த செடியில்
பூ பூக்க மறுக்கிறது
என் கண்ணீரை
ஊற்றியபோதும்.

3. உன் அழைப்பிற்கு
காத்திருக்கையில்
நீ மட்டும்
அழைப்பதேயில்லை

4. நான் வசிப்பது
உன் ஒற்றைப் புன்னகையில்
நீ வசிப்பது
என் கண்ணீர்த் துளிகளில்

5. மனமின்றித் தான்
பிரிந்தேன்
மனதை உன்னிடம்
கொடுத்துவிட்டு.

6. நீ கண்பார்க்கும்
வேளையில்
நான் தொலைந்து போகிறேன்.

7. பூக்களைச்
சுற்றும் வண்டு
உன்னைச்
சுற்றும் நான்.

8. உனக்கு
மழையைப் பிடிப்பதனால்
மழை
விரும்பாதவன் நான்.

9. நான்
அழுதாலும் சிரித்தாலும்
மௌனம் மட்டுமே
உன் பதிலாய்
இருக்கிறது.

10. பொன்மொழிகளுடன்
உறங்கச் சொல்லி வருகிறது
உன் குறுஞ்செய்தி
அதற்குப் பின்
நான் எங்கே உறங்குவது.

4 comments: