2009/10/24

எச்சம்

அடர் மரமும் பழுத்த காய்களும்
படர் புல்வெளியுமாய்
செழித்திருந்த வனத்துக்குள்
வேலி தாண்டாமல்
தன்னிடத்தே வாழ்ந்து
துள்ளித் திரிந்தன புள்ளி மான்கள்.
செழித்த வனத்துக்குள்
வன்புணர் தரிக்க எத்தனித்தன
இவ்வேலி ஓநாய்கள்
வேற்று வேலியின் பசுத்தோல் தரித்த
சிங்கத் துணையுடன்.
மானம் காக்க முண்டியடித்து
கொம்புகள் உடைய
உயிர்நீத்தன புள்ளி மான்கள்.
குருதி படர்ந்த புல்வெளிகளாய்
மாறியிருந்தன செழித்த வனங்கள்.
புணர்பசி தீர்ந்த ஓநாய்கள்
ஆர்ப்பரித்து தோலுரிக்கத் துவங்கின
எஞ்சியிருந்த மான்களை.
ஓநாய்த் தலைவனின் பிருஷ்டம் விழுந்த
எச்சத்திற்கு விரைந்தோடியது
இன்னும் பசுத்தோல் தரித்த
வேற்று வேலிச் சிங்கங்கள்.

No comments:

Post a Comment