2009/10/11

விருதா இரவுகள்.

வெயில் உமிழ்ந்துபோன
வெப்பக்காடாய் மாறியிருக்கிறது
என் பழுத்த இரவுகள்.
இடை இடையில் கனவுக் குழந்தைகள்
என் தலை கோதிச் செல்கின்றன.

புணர்ச்சியில் திளைத்திருக்கும் பறவைகள்
எனக்கான உனது பிரிவினை
நினைவூட்டிச் செல்கின்றன.
பிரிவுகளும் இரவுகளும்
மேலும் நெருக்கமடைகின்றன.
இன்றைய இரவினில்
காற்றும் மரக்கிளைகளும் கூட
தனிமைக்கோலம் பூண்டிருக்கின்றன.
அந்த நேரம் பெய்யும் மழைக்கு
ஏனோ என் மனது எதிரியாகி விடுகிறது.
மேலும் மேலும் குழப்ப பிம்பங்கள்
விழி மறைத்தபடியே நகர்கின்றன.
இன்றைய எனது விருதா இரவுகள்
நீண்டுகொண்டே இருக்கின்றன.
உன் ஒற்றை முத்தத்தில்தான்
எனது இரவும் விடியலும்
கலவிகொள்ளப்போகின்றன.

No comments:

Post a Comment