2009/10/09

சிறகிலிருந்து பிரிந்த இறகு...


சலனமற்றுக் கிடக்கும் இன்றைய
இரவுகளின் ஆழம் என்னை
அமளியடையச் செய்கிறது.
நீ இல்லாத இரவு
நட்சத்திரங்கள் இல்லாத
வானமாய் காட்சியளிக்கின்றது.
தனித்திருக்கும் என்னை
உன் நினைவுகள்
ஏனோ பயமுறுத்துகின்றது.
உன் கை கோர்த்து நடந்த இடமெல்லாம்
மௌனம் கலைந்த சிறகுகளாய் மாறிவிட்டது.
உன் கைகள் விட்டுச்
சென்ற ரேகைகளை எல்லாம்
காற்று கலைத்துச் செல்கிறது.
நீ சிந்தும் ஒற்றை புன்னகைக்காய்
எனது இரவு மீட்சியடைகிறது.
துணை தேடி பறக்கும்
பறவையின் சிறகிலிருந்து
பிரிந்த இறகு ஒன்று
என் மேல் விழுந்து கிடக்கிறது.

2 comments: