2009/04/02
தவிப்பு !
ஒரு ரயில் பயணத்தின் போது...
வைகறைப் பொழுதின் இருள் கடந்து போய்
வெளிச்ச பிம்பங்கள் முளைத்தெழ
சாளரம் வழியே -
வெண் பனிக்காற்று முகம் துடைக்க
கருவானம் வெண்பனியில் உறைந்து கிடக்க
புல்லின் மீது பனித்துளிகள் படர்ந்து கிடக்க
அதன் மீது ஞாயிற்றின் செங்கதிர்கள் சுட்டெரிக்க
மரக்கிளைகள் பூத்து குலுங்க
தென்னங்கன்றுகள் குதூகலிக்க
எதிர் சன்னலோரத்தின் இளம் பெண்ணின்
காது மடல்களின் ஆடலுக்கு காற்று அசைந்திட
தந்தை வயதில் அருகிலிருப்பவர்
உறக்கத்தில் என் தோள் சாய்ந்திட
பனியில் உறைந்துபோய் உறங்கி கிடக்கும்
மழலை விழி திறந்திட
நான் கண்டு சிலிர்த்துப் போயி
கவிதை எழுதிட முனைகையில்
என் பேனா மை தீர்ந்துவிட !!!
Subscribe to:
Posts (Atom)