2009/06/14

கேணி - ஒரு இலக்கிய சந்திப்பு

எழுத்தாளர், பத்திரிகையாளர் ஞாநி அண்மையில் குடிபெயர்ந்த கேகேநகர் வீட்டில் நடந்த ஒரு இலக்கிய கலந்துரையாடல்.
அவர் வீட்டின் பின்புறம் அமைந்திருந்த இயற்கையான சூழல் தான் (மூடப்பட்டிருந்த கிணறும் அதன்மேல்சூழ்ந்திருந்த மரத் தோட்டமும்) இந்த "கேணி" இலக்கிய கூட்டம் உருவாவ
தற்கான மூலம். இந்த ஒரு அழகிய சூழலை இளைய தலைமுறை எழுத்தாளர்களையும், வாசகர்களையும் ஊக்குவிக்கும் தளமாக பயன்படுத்தவும் எண்ணி அமைந்ததே இந்த "கேணி" என்பது திரு. ஞாநியின் கூற்று.
தொடக்கமாக எனது விருப்பத்திற்குரிய எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் தனக்கு பிடித்தசிறுகதைகளை பற்றி பேசினார்.


நான் கலந்து கொள்ளும் முதல் இலக்கிய கூட்டம் இதுவென்பதால் "ஆர்வத்தை" பற்றி சொல்லவே வேண்டாம். கூடவே சொல்ல முடியாத சிறு தய
க்கமும் இருந்து கொண்டு தான் இருந்தது.
இன்றைய ஞாயிற்றின் வெப்பம் தணிந்த மாலை பொழுதில் பல இளைஞர்களின் (இருபாலரும்) படை சூழ கூட்டம் இனிதே துவங்கியது.

திரு. எஸ். ராமகிருஷ்ணன் தனக்கு பிடித்தசிறுகதைகளை தனக்கேயுரிய நடையில் கதை சொல்ல ஆரம்பித்தார். புதுமைபித்தன், முஹம்மத் பஷீர் போன்றவர்களின் சிறுகதையில் துவங்கி மேலும் பலரின் சிறுகதைகளில் நீண்டுகொண்டே போனது. எனது பால்ய வயதில் தாத்தா பாட்டியோடு முடிந்த எனது கதை கேட்டல் இன்று எனது இளமை பருவத்தில் மீண்டும் முளை விட்டது.

சுமார் இரண்டறை மணி நேரம் நீடித்த பிறகு (இடையில் நாவிற்கும் ருசியாக சுண்டலும் தேநீரும் சேர்ந்து), திரு. எஸ். ராமகிருஷ்ணன் வுடன் எங்களின் கலந்துரையாடலுடன் கூட்டம் சுமார் ஏழு மணியளவில் இனிதே முடிந்தது.
இது நிச்சயம் இன்றைய இளைய படைப்பாளிகள், வாசகர்கள் பயணிக்க வேண்டிய ஒரு தளமாக அமையும் என்பதில் ஆச்சரியம் இல்லை.
ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்று கிழமைகளில் இந்த கூட்டம் நடைபெறும். இன்னும் பல இளைஞர்கள் (இருபாலரும்) கலந்து கொண்டு தங்களின் இலக்கிய சிந்தனைகளை விரிவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பமும்.
நன்றி...

2009/06/02

அவனும்... இவனும்...

குளிரூட்டிய அறைக்குள் அடைந்துகொண்டு
இரவும் பகலும் வித்தியாசமின்றி வேலை செய்து
வார இறுதியில் கிடைத்த பொருளை
உயர்தர விடுதியில் பருக்கைகளை பொரிப்பவனும்

இயற்கையின் நிழல்களாய் வீதி அலைந்து
செய்வதறியாது அடுத்து வேலைக்கான
பருக்கைகளைத் தேடி
குப்பைத்தொட்டி தேடுபவனும்

அவனுக்கு அது சொர்க்கம் என்றால்
இவனுக்கு இது சொர்க்கம்.

சவலை


மாதம் ஒரு முறையேனும்
வெளிநாடு பறந்திருக்க
இரவு வெளிச்சத்தில் இருள்
நோக்கி ஆடை களைத்திருக்க
பல திடல்களில் வான் நோக்கி
சிக்சர்கள் மிதந்திருக்க
அப்பாவிகளை வியர்வையில் நனைத்து
பின்னிருந்து தோலை சுரண்டிருக்க
ஏன் அவன் மட்டும்
சோற்றுப்பருக்கையைத் தேடி
குப்பைதொட்டிக்கு அலைகின்றான்?