2009/12/30

பூ

(உரையாடல் கவிதைப் போட்டிக்கான இடுகை)


அழிந்துபோகாத பல வண்ணங்களைக்
கொண்டிருப்பவன் நான்.
மொட்டுகளாய் மொட்டவிழ்ந்ததுமாய்
பல பூக்களையும் சுமந்து
கொண்டிருப்பவன் நான்.
உயிருள்ள பூக்களுக்கிடையே
கண்காட்சியில் எனக்கும்
இடம் உண்டெனினும் சூட்டிக்கொள்ள
விரும்புவதில்லை எவரும்.
ஆசைக்கேனும் பறிக்க எண்ணமற்று
விலகிச்செல்கிறது விரல்கள்.
இசைந்து வரும் காற்றுக்கு
எவ்வளவு
தலையசைத்தும்
மொட்டவிழ்க்கத்தெரியாத என்னிடம்
கலவி கொள்ள முயன்று
தோற்றுக்கொண்டே இருக்கிறது
ஒரு வண்டு.

2009/12/21

Leave me not!!!


Lying idle on your lap
with a sporadically working brain
Tears rolling down my eyes
drenches your toes
Haunting memories in front of my eyes
makes my soul deprive

My Love, breaking you
never gives happiness
My Love, thinking you
never gives sorrows
My Love, leave me not
alone, alone, alone!!!

2009/12/08

பேருந்து நிறுத்தம்

கனவுகள் நெருங்காத பல கனத்த
இரவுகளைச் சுமந்த மறைவுகளற்ற வீடுகளாய்
நடைபாதை குடும்பங்கள்.
அடுத்த வேளை உணவிற்கு
யாசித்து நிற்கும் பல் விழுந்த கிழவன்.
எதையோ பறிகொடுத்து சேருமிடம் தெரியாது
ஒவ்வொரு பேருந்தை வெறித்துப் பார்ப்பவன்.
எவனுடைய சுகத்திற்காய் தன்னை தொலைத்துவிட்டு
கருவில் பாரம் சுமப்பவள்.
கையில் தன் சோக சரிதையை சுமந்து
வேலை தேடும் பட்டதாரி.
நொடிப்பொழுதில் பணம் களவாட
சமயம் பார்க்கும் ஜேப்படிக்காரன்.
நோய் சுமந்து கவனிப்பாரற்று
உயிர் துடிக்கும் நாய்
என ஒரு பேருந்து நிறுத்தம்
பேருந்து நிறுத்தமாக மட்டும் இருப்பதில்லை.

2009/12/04

சுமைதாங்கி

நாலாபுறமும் அடைப்பட்டிருந்த
காவித்துணிக்கு சிறுதுளை
வழியே காற்றூதி
உயிர் பரப்பிக்கொண்டிருந்தாள்
ஒரு மூதாட்டி
தன் தலையின் பாரம் சுமந்திட.