2009/10/24

வடு

ஒரு மெல்லிய மழைநாளில்
ஈரம் கசிந்த மனதுடன் காணவந்ததில்
முதல் முத்தமிட்டாய் எனக்கு.
உன் ஈரத்தில் நனைந்து போயிருந்தது
என் அனேக விரல்கள்.
பிறிதொரு நாளில் இரண்டாம் முத்தமிட்டாய்
என்னை காதலிப்பதாகச் சொல்லி.
முழுவதுமாய் கசிந்து போயிருந்தேன்
உன் முத்தத்திற்காய்.
ஏனைய முத்தங்கள் நீ கொடுத்து வந்தாய்
ஏதேதோ காரணங்கள் சொல்லி.
இன்று கடைசி முத்தமென விரைந்து வருகிறாய்
உனக்கு திருமணம் எனச்சொல்லி.

1 comment: