2009/10/25

அற்றல்

கொடுத்துத் தீர்ந்த
கையோடு
யாசகம் கேட்டு வந்த
வயோதிகனிடம்
"இல்லை" என
பலமுறை சொல்லியும்
புரிந்ததாகத் தெரியவில்லை
பணம் தர
என்னிடம் மனம்
இல்லையென்பது.

2 comments: