2009/10/12

உயிர்ப்பு


ஒற்றைப்பாறையில் சரியும்
மணல் துகள்களாய் என் மனது.
அதில் ஒட்டிக்கிடக்கும்
நீர்த்திவலைகளாய்
உன் நினைவுகள்.
இருள் நிறைந்த என் வனப்புக்குள்
ஒளியூட்டும் நிலவொளியாய்
உன் குருட்டு புன்னகை.
பாறைகளினூடே பரவும்
ஒற்றை ஒளியாய்
நீ நனைத்துப்போன முத்தங்களில்
திளைக்கிறது எனது உயிர்.

3 comments:

  1. ஐயோ ஐயோ, கொல்லுதானே (கொலைசெய்கிறானே)...

    /--நீ நனைத்துப்போன முத்தங்களில்
    திளைக்கிறது எனது உயிர்--/

    ஒரு எல்லையை தொட ஆரம்பிச்சிட்டடா விஷ்ணு. ஆ.விக்கு அனுப்பு கண்டிப்பா பிரசுரம் ஆகும்.

    ReplyDelete
  2. thanks prabhu.. no idea to give to publications as of now..

    ReplyDelete
  3. Padam unga varigal edhu azhagunnu solla mudiyala

    ReplyDelete