கனவுகள் நெருங்காத பல கனத்த
இரவுகளைச் சுமந்த மறைவுகளற்ற வீடுகளாய்
நடைபாதை குடும்பங்கள்.
அடுத்த வேளை உணவிற்கு
யாசித்து நிற்கும் பல் விழுந்த கிழவன்.
எதையோ பறிகொடுத்து சேருமிடம் தெரியாது
ஒவ்வொரு பேருந்தை வெறித்துப் பார்ப்பவன்.
எவனுடைய சுகத்திற்காய் தன்னை தொலைத்துவிட்டு
கருவில் பாரம் சுமப்பவள்.
கையில் தன் சோக சரிதையை சுமந்து
வேலை தேடும் பட்டதாரி.
நொடிப்பொழுதில் பணம் களவாட
சமயம் பார்க்கும் ஜேப்படிக்காரன்.
நோய் சுமந்து கவனிப்பாரற்று
உயிர் துடிக்கும் நாய்
என ஒரு பேருந்து நிறுத்தம்
பேருந்து நிறுத்தமாக மட்டும் இருப்பதில்லை.
அருமையாக எழுதியிருக்கிறீர்கள் நண்பரே! வாழ்த்துக்கள்.
ReplyDeletemigavum nandri murali...
ReplyDeleteஅருமை..
ReplyDelete