2010/05/18

பறவை கவிதைகள்

பெயர் தெரியாத
அப்பறவையின்
ஒவ்வொரு சிறகசைவிலும்
காற்று என்னை
கவ்விச்செல்கிறது.

----------------------------------

எதுவுமற்ற
வான்வெளியை
எதுவாகவோ
நிரப்புகிறது
ஒரு பறவை.

----------------------------------
எங்கோ பிரிந்த
தன் துணையைத் தேடி
என் சன்னலோரம்
சதா காத்துக்கொண்டிருக்கிறது
ஒரு பறவை.

1 comment:

  1. எதுவாகவோ
    நிரப்புகிறது

    :))

    ReplyDelete